×
பெந்தேகோஸ்தே நாள் | Pentecost Day |19th May 2024| Rev. B. Samuel | Praise AG Church | Kolathur

Youtube Link:

https://www.youtube.com/watch?v=z4EonVWcjXs


தியான பகுதி - யோவான் 15:7, ரோமர் 8:5-17

             பஸ்கா பண்டிகையில் இருந்து ஐம்பதாவது நாள் தான் பெந்தெகோஸ்தே பண்டிகை.

             பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள் வந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

             இந்த நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டபோது அங்கு இருக்ககூடிய ஜனங்கள் வேறு பாஷைகளை பேசினார்கள்.

ரோமர் 8-ம் ஆதிகாரம்

                ஒரு விசுவாசி எப்படி வெற்றிகரமாக வாழ முடியும் என்றும் இரகசியத்தை சொல்லுகிற வசனம் தான் இது என்று சொல்லுகிறார்கள்.

             ஏதேன் தோட்டத்தில் உள்ள ஜீவ விருட்சத்தின் கனியைப் போல இருப்பது தான் இந்த 8ம் அதிகாரம் என்று சொல்லுகிறார்கள்.

             மாம்சத்தை எப்படி ஜெயிப்பது என்பதை பற்றி பவுல் இங்கு எழுதுகிறார்.

             எப்போது இரட்சிக்கபடுகிறோமோ அப்போது நமக்குள்ளே ஆவியானவர் ஒரு புதிய வாழ்க்கை வாழ நம்மை நிரப்புகிறார்.

             என்றைக்கு மனதளவில் கிறிஸ்துவிற்கு இடம் கொடுக்கிறோமோ அப்போது ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார். (ரோமர் 8:15)

             இன்றைக்கு கிறிஸ்துவிற்குள் இருப்பவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது ஆவியானவர் எனக்குள் இருக்கிறாரா?

என்றைக்கு இருதயத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோமோ அப்போதே நமக்குள் ஆவியானவர் தங்கி விடுகிறார்.

1. பயத்தை அகற்றுகிறார்.

உதாரணம் - பேதுரு

                ஆவியின் நிறைவை பெறாத வரைக்கும் அவனுடைய வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது (அவன் பயந்தான்)

                ஆவியானவரின் நிறைவைப் பெற்ற போது பயப்படாமல் தேவனுக்காக சாட்சியாக நிற்கிறார்.

ஆவியானவர் நமக்குள் இருக்கும் போது பயத்தை நீக்குகிறார், ஒரு புது ஜீவனைத் தருகிறார்.

ரோமர் 8:6 மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம்.

ரோமர் 8:9-ம் வசனம் கர்தருடைய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுவதற்கு இடம் கொடுத்தால் ஆவிகுட்பட்டவர்களாய் இருப்போம்.

ரோமர் 8:11 – உயிரோடு இருக்கும் போது உயிர்பிக்கும் அனுபவத்தை ஆவியானவர் கொடுப்பார்.

இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிற ஆவியானவரால் நிரப்படுவதற்கு இடம் அளிக்கிறோமா?

             ஓவ்வொரு நாளும் ஆவியானவரால் நிரப்படுகிற அனுபவம் நமக்குள் இருக்க வேண்டும்.

உதாரணம் - அப்போஸ்தலர்கள் இந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள்.

             நமக்குள்ளே பரிசுத்த ஆவியானவர் இருப்பாரானால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அசுத்த ஆவி நம்மை பார்த்து அது பயப்பட வேண்டுமே தவிர நாம் பயப்படக் கூடாது.

             பரிசுத்த ஆவியானவர்.நம் கூட இல்லை நமக்குள் இருக்கிறார்.

2. தேவனுடைய ஆவியானவராலே நிரப்பட்டிருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.

             ஆவியானவரே என்னை நிரப்பும் என்கிற முதல் அனுபவத்தை பெறுங்கள்.

             தினந்தோறும் ஆவிக்குரியக் காரியங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்;;;;. பிரசன்னம் கேட்டு அதை பெற்றுக் கொள்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் உயிரோட்டமான கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்கும்.

             நன்றி செலுத்த பழகுங்கள்.

             நல்ல கிறிஸ்தவ பாடல்கள், செய்திகள் கேளுங்கள்.

             சில விசுவாசிகளோடு சேர்ந்து ஜெபிக்க, தேவனை பற்றி பேசப் பழகுங்கள்.

3. ஆவியை அவித்து போடாதிருங்கள், துக்கப்படுத்தாதிருங்கள். (1தெச 5:19)

நாம் அவருக்கு பிரியமில்லாமல் நடக்கும் போது நாம் அவரை துக்கப்படுத்துகிறோம்.

உதாரணம் - சிம்சோன், சவுல்

                தன்னுடைய சொந்தக் காரியத்திற்கு இடம் கொடுத்து விட்டாதால் ஆவியானவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.

(தேவனுடைய வார்த்தை நமக்கு நேராய் வரும் போது பிடிக்கிறதோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையென்றால் ஆவியானவர் விலகி விடுவார்.)

1கொரி 9:27 – மாம்சத்தில் சுய கட்டுபாடு இருக்க வேண்டும்.

1. அதிகமாக சாப்பிடுவது

2. அதிக தூக்கம்

3. சோம்பல் 

             மாம்சத்தை கட்டுபாட்டிற்குள் வைக்க பழகுங்கள். நான் ஆகாதவனாய் போகாதபடி சரீரத்தை கட்டுப்படுத்துங்கள்.

             ஆவியானவர் உதவி செய்வார். ஆவியானவர் இருந்தால் இந்த ஒழுங்கு நமக்குள் இருக்கும்.

             கேளுங்கள் ஆவியானவரே நீர் என்னை ஆளுகை செய்து என்னை நிரப்பும்.

             ஆவியானவர் நிறைவிற்கு அடையாளமாக இன்றைக்கு நம்மிடத்தில் கைபிரதி இருக்கிறது இதை ஒரு ஐந்து நபருக்கு கொடுங்கள்.

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God